பொங்கல் பண்டிகை - இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

 
bus

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

BUS

வெளியூர் செல்ல பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலம்  முன்பதிவு செய்துகொள்ளலாம்.

bus

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்  கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் , ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றி செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கார் மற்றும்  மற்ற வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கும் வகையில் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாமல் திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு,  ஸ்ரீ பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்ல போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.