ஞானசேகரனின் கடையில் போலீசார் பிரியாணி வாங்கினார்களா? - தீவிர விசாரணை

 
police

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விசாரித்த அடையாறு போலீசாரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஞானசேகரனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வலிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஞானசேகரனுக்கு சிகிச்சை முடிந்ததை தொடர்ந்து போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விசாரித்த அடையாறு போலீசாரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் இருந்து  6 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். காந்திநகரில் ஞானசேகரன்  நடத்தி வந்த பிரியாணி கடையில் போலீசார் பிரியாணி வாங்கினார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.