ஈபிஎஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட சட்டப்போராட்டங்களுக்கு வெற்றி- எஸ்பி வேலுமணி

 
velumani

தமிழக மக்களையும், அவர்களின் உரிமைகளையும் காப்பதில் அஇஅதிமுக எப்பொழுதும் உறுதியோடு இருக்கிறது என்பதற்கு ஜல்லிக்கட்டு தீர்ப்பு மேலும் ஒரு சாட்சி என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார். 

ரெய்டு பரபரப்பு... ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனையில் எஸ்.பி. வேலுமணி! | nakkheeran

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக, பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்றும், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்தில் எந்த தவறும் இல்லை என்று கூறி, ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்துள்ளது. 


இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உறுதி செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் ஆசி பெற்ற மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தொடர் சட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதன் வாயிலாக இன்றைக்கு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதற்காக முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களையும், அவர்களின் உரிமைகளையும் காப்பதில் அஇஅதிமுக எப்பொழுதும் உறுதியோடு இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பு மேலும் ஒரு சாட்சி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.