பாதுகாப்பாக தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்வோம் - எஸ்.பி.வேலுமணி

 
velumani

தீபாவளி பண்டியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகளை உடுத்தி தீபாவளி பண்டியை கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஒருவருக்கொருவர தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதேபோல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், அன்பின் ஒளி வீசும் இந்த இனிய #தீபாவளி திருநாளில் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, ஆரோக்கியம், செல்வம் பெருகி, மகிழ்ச்சியுடன் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட இறைவனை வேண்டிக்கொண்டு, அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பாதுகாப்பாகவும், சுற்றுசூழலுக்கு தீங்குவிளைவிக்காமலும் இந்த #தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்வோம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.