செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்... காவல்துறைக்கு எஸ்.பி. வேலுமணி கண்டனம்!
![velumani](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/de6599d6abfb705bff3fad3f846ec4c2.jpg)
தமிழகத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாழும் வகையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் @news7tamil செய்தியாளர் திரு. நேசபிரபு அவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தாக்குதல் தொடர்பாக காவல்துறையிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் விடியா அரசின் காவல்துறை இருந்தது கண்டனத்திற்குரியது. தாக்குதலுக்குள்ளான நியூஸ் 7 தமிழ் செய்தி சேனலின் செய்தியாளர் திரு. நேசபிரபு அவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் @news7tamil செய்தியாளர் திரு. நேசபிரபு அவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
— SP Velumani (@SPVelumanicbe) January 25, 2024
தாக்குதல் தொடர்பாக காவல்துறையிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையையும்… pic.twitter.com/wwjjGiZuHz
மேலும் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் கழக பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் வலியுறுத்தியது போல, உரிய தண்டனை பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாழும் வகையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் எனவும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.