சினிமா துறையில் அறிமுகம் செய்த எஸ்பிபியின் இறுதி அஞ்சலிக்கு அஜித் வராதது ஏன்?- சரண் விளக்கம்

 

சினிமா துறையில் அறிமுகம் செய்த எஸ்பிபியின் இறுதி அஞ்சலிக்கு அஜித் வராதது ஏன்?- சரண் விளக்கம்

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 25 ஆம் தேதி சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது. திரையுலகினர் மட்டுமன்றி அரசியல் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் இரங்கல்கள் தெரிவித்தன. எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே நடிகர் அஜித்தை திரையுலகிற்கு அறிமுகம் செய்ததே எஸ்பிபி என்றும், ஆனால் அவர் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்றும் பல்வேறு சலசலப்புகள் எழுந்தன.

சினிமா துறையில் அறிமுகம் செய்த எஸ்பிபியின் இறுதி அஞ்சலிக்கு அஜித் வராதது ஏன்?- சரண் விளக்கம்

இதுகுறித்து விளக்கமளித்துள்ள எஸ்பிபியின் மகன் சரண், “அஜித் வந்து பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் பிரச்சினை இல்லை. அது குறித்து எந்த கவலையும் இல்லை, அஜித் எனக்கு நண்பர், எனது தந்தைக்கும் நல்ல பரிச்சயமானவர். அதுகுறித்து நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறினார்.