அப்போ அப்படி பேசினீங்க.. இப்போ என்ன பண்ணிங்க?தவெக அரசை வறுத்தெடுத்த செந்தில் பாலாஜி!

 
1

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை என குற்றம்சாட்டினார். அரசின் அமைச்சர்கள் தங்களது துறைகளை மேம்படுத்துவதை விட திமுகவை விமர்சிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மாநிலத்தில் மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு மற்றும் மகளிர் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் வலியுறுத்தினார். தேர்தலுக்கு முன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், விளம்பர அரசியலில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

டாஸ்மாக் விவகாரத்தை குறிப்பிட்ட அவர், தேர்தலுக்கு முன் கடுமையாக விமர்சித்தவர்கள் தற்போது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை விளக்க வேண்டும் என்றார். மேலும், தொழில்துறை அமைச்சர் தொழிலாளர் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறினார்.