மூன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை - கண்ணை சிதைத்த கொடூரம்!
Feb 25, 2025, 10:56 IST1740461208111

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 16 வயது சிறுவன் அந்த சிறுமி சத்தமிட்டதால் கல்லால் தாக்கி சிறுமியின் கண்ணை சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மூன்றரை வயது குழந்தையை, உறவினரான 16 வயது சிறுவன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளான். சிறுவனின் செயலால் அந்த குழந்தை சத்தம் போட்ட நிலையில், இதனால் தான் மாட்டிக்கொள்வோம் என நினைத்த அந்த சிறுவன் குழந்தையின் தலையில் கல்லால் பலமாக தாக்கியுள்ளார். இதில் அந்த குழந்தையின் ஒரு கண் சிதைந்தது. மேலும் அந்த சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தையின் சத்தத்தை கேட்டு அங்கு சென்ற உறவினர்கள் குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலையில் பலத்த காயத்துடன் ஒரு கண் சிதைந்த நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உறவினரான 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட சிறுவன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.