சிக்னல் கோளாறு- செங்கல்பட்டில் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம்

 
ச் ச்

சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் சிக்னல் காரணமாக தாமதமாக செல்கின்றன. செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில் மூன்று ரயில்கள் நிறுத்தம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


செங்கல்பட்டு மாவட்டம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் சிக்னல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் செங்கல்பட்டு ரயில்வே நிலையத்திலும் மற்றும் வழியிலும் நிறுத்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு ரயில்வே நிலையம் அருகே பரனூர் என்ற இடத்தில் பாண்டிச்சேரி விரைவு ரயிலும் செங்கல்பட்டில் விழுப்புரம் பேசஞ்சர் ரயிலும் செங்கோட்டை விரைவு ரயில்செங்கல்பட்டிலும்  சேது ராமேஸ்வரம் விரைவு ரயில் ஒத்திவாக்கத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன. 

அதுபோல முத்துநகர் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில்கள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கையில் விழுப்புரம் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் சிக்னல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெறும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.