மூடி மறைத்தது ஏன்? திமுக வெளியிடத் தயாரா?- சண்முகம்
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் திமுக மூடி மறைத்தது ஏன்? என மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தளத்தில், “எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய திரு. மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?இந்த விஷயத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

