“நாங்க ஆதரவளிக்காவிட்டால் பதவியேற்பு விழாவே நடந்திருக்காது”- விஜய்க்கு சண்முகம் பதிலடி

 
 பத்து நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வேண்டுகோள் விருத்துள்ளார்.     சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  துப்புரவு பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக  மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நேரடியாக சந்தித்து,  அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ 10 நாளாக போராடி  வருகின்றனர். இந்த சுமுகமான முறையில் நியாயமான கோரிகை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.  அமைச்சர் பேச்சு வார்த்தை குறித்து கூறினார். பேச்சு வார்த்தை சுமுகமான முறையில் முடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொள்ளும்.  தனியார் மையம் என்பது நாடு முழுவதும் நடைபெறும். தமிழகத்திலும் பல்வேறு துறைகளில் தனியார் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே இருக்கும் உரிமையை பறிப்பதை ஏற்க முடியாது. நியாயமான முறையில் இதற்கு தீர்வு காண நாங்கள் முயற்சி மேற்கொள்ளவோம். சாம்சங் விவகாரத்தில் 36 நாட்கள் போராடி உரிமையை பெற்றோம். தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்க வேண்டும் என்பதையே அரசிடம் நாங்கள் வலியுறுத்துகிறோம். தேர்தல் வாக்குறுதி கொடுத்ததை மட்டுமே அரசு செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. தற்போது போராடும் கோரிக்கைகளை ஆக்க பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

மக்களின் ஆதரவுடன் தவெக ஆட்சி நடப்பதாக பேசிய முதலமைச்சர் விஜய்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், “குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தோம். நாங்கள் ஆதரவு தராமல் இருந்திருந்தால் 10ஆம் தேதி பதவியேற்பு விழாவே நடந்திருக்காது.  நாங்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே ஆதரவளித்தோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டுமென நினைத்தோம். ஒரு வேளை நாங்கள் மே 8,9ஆம் தேதிகளில் இருந்த சூழலில் ஆதரவு கொடுக்காமல் போயிருந்தால் மே 10ஆம் தேதி பதவியேற்பு விழாவே நடந்திருக்காது. அதன்பின் எப்போது வேண்டுமானாலும் குடியரசு தலைவர் ஆட்சி அமைந்திருக்கும், தமிழ்நாட்டில் பாஜக காலூன்றக்கூடாது என்பதற்காகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒற்றக் கருத்துடைய கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறது. பின்வாசல் வழியாக குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதை ஏற்க முடியாது. அதனை தடுக்கவே தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தோம்” என்றார்.