அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்...!

 
senthil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்.

பிப்ரவரி 5.ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த பத்தாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 18ம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.  இந்நிலையில் நேற்று மாலை 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.  காலை 11 மணிக்கு முதல் நபராக அதிமுகவில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில் முருகன் தனது மனுவை திரும்ப பெற்றார். அடுத்தடுத்து சில சுயேச்சைகள் மனுக்களை திரும்ப பெற்றனர். மாலை 3 மணி வரை 8 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில், இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார். அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.  கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவரை நீக்கிய நிலையில், செந்தில் முருகன் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.