செந்தில் பாலாஜி ஜாமின் மனு - நாளை மறுநாள் ஒத்திவைப்பு
Jul 10, 2024, 11:42 IST1720591949482

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கைதாகி ஓராண்டாகியுள்ள அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு (ஜூலை12) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணையை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம். ஓராண்டுக்கும் மேலாக மனுதாரர் சிறையில் உள்ளார்; வேண்டுமென்றே அமலாக்கத்துறை காலதாமதப்படுத்துவதாக செந்தில்பாலாஜி தரப்பு குற்றச்சாட்டியுள்ளது.