ராமேஸ்வரம் புறப்பட்டார் செங்கோட்டையன்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்?

 
பள்ளிகளில் ஏப்ரல் மாதத்துக்கு முன் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் செல்லும் நிலையில், தூத்துக்குடிக்கு விமானத்தில்  வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ராமேஸ்வரத்திற்கு காரில் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் செங்குத்தாக தூக்கக்கூடிய தூக்கு பாலம் கடந்த ஒரு மூன்று ஆண்டுகளுக்கு மேல நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து  பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில், ராமேஸ்வரத்துக்கு வருகை தந்து பாம்பன் பாலத்தை திறந்து வைத்து ரயில் சேவையை ராமேஸ்வரத்திற்கு அர்ப்பணிக்க உள்ளார். பிரதமரின் வருகை ஒட்டி பாதுகாப்பு பணிக்காக 10 எஸ்பி, 15 டிஐஜி, 40 டிஎஸ்பி உள்ளிட்ட 3500 போலீசாரை உட்படுத்தி ராமேஸ்வரம் தீவு முழுவதும்  மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் பாம்பன் பாலம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில், நிகழ்ச்சி நடைபெறும் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் செல்லும் நிலையில், தூத்துக்குடிக்கு விமானத்தில்  வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ராமேஸ்வரத்திற்கு காரில் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நேற்று நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாக கூறப்பட்ட நிலையில், பிரதமரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.