"திட்டமிட்டபடி ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்"- செங்கோட்டையன்

 
"திட்டமிட்டபடி ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்"-செங்கோட்டையன்

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திற்க்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி துறைவாரியாக அனைத்து அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.. மழை வரும்போது தமிழகத்தில் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு இந்த துறை வேகமாக செயல்பட்டு வருகிறது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ரேடாரில் ஆய்வு செய்து வருகிறோம். பருவமழை பாதிப்புகளை தடுக்க 24 மணி நேரமும் தயார் நிலையில் அரசு உள்ளது, 3 இடங்களில் ரேடார் மூலம் ஆய்வு செய்யப்படும்.கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” என்றார்.