மக்களுக்காக, மக்களிடமிருந்து வந்த நாம் மக்களுக்காக நிற்க வேண்டும்! கட்சியினருக்கு சீமான் அட்வைஸ்

 
குரூப் - 4 மூலம் ஆண்டுதோறும் 30,000 பணியிடங்களை நிரப்புக -  சீமான் கோரிக்கை..

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டங்கள் வெல்லட்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருட்களின் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள், சாதிய மோதல்கள், வன்முறைத் தாக்குதல்கள், கூலிப்படை கலாச்சாரம், கருத்துரிமைக்கு எதிரான அரசின் அடக்குமுறைகள் ஆகியவற்றால் முற்றுமுழுதாகச் சீரழிந்து போயுள்ள சட்டம்-ஒழுங்கைக் காக்க தவறியதைக் கண்டித்தும், திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி, அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 21-07-2024 அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த என் அன்பிற்குரிய தம்பி-தங்கைகளுக்கும், பெருமதிப்பிற்குரிய பெற்றோர்களுக்கும், அன்பு உறவுகளுக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்!

மக்களுக்காக, மக்களிடமிருந்து வந்த நாம் மக்களுக்காக நிற்க வேண்டும், மக்களுடன் நிற்க வேண்டும் என்ற உன்னத உணர்வில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரணாகவும், மக்களின் துயர் துடைக்கும் கரமாகவும் ஒருங்கிணைந்து செயற்பட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் எனது அன்பும், பாராட்டுகளும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.