“பெரியாரும் இல்லை, சிறியாரும் இல்லை”- மீண்டும் சீமான் சர்ச்சை பேச்சு

 
சீமான்

விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக கள் விடுதலை மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மேடையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபாளர் சீமான், "கள் எமது உணவு, கள் எமது உரிமை என்ற முழக்கத்தை முன்னெடுத்து கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. தமிழனின் தேசிய பாணம் கள்,  கள் என்கிற பெயர் தான் பிரச்சினையா..? பனம்பால் மூலிகைச் சாறு என்று பெயர் வைத்திடலாம். டாஸ்மாக்கில் விற்கப்படும் மது என தீர்த்தமா? மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு மது ஆலைகள் இல்லை, ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து முதலமைச்சர்களுக்கு மது பான ஆலைகள் உள்ளது.

தெருவுக்கு தெரு டாஸ்மாக் திறந்து வைத்துவிட்டு சட்டம், ஒழுங்கு எப்படி சரியா இருக்கும்? கள் கடை திறந்துவிட்டால் டாஸ்மாக் படுத்துவிடும், அதிகாரம் நிரந்தரமில்லை, ஒரே நாளில் நூறு வழக்கு வாங்குனவன் நான் தான். கிரிக்கெட்டில் இல்லை வடிவேல் சொல்லுவது போல் சிறை பறவை நான். கள்ளில் தான் கலப்படம் இருப்பதாக தடை செய்கிறார்கள். ஆனால் பீச்சில் இருக்கிற சமாதி மேல ஆணையாக சரக்குல கலப்படம் இல்லையா? அரசுப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் கண்டறியாமல் டாஸ்மாக்குக்கு குடிக்க வரவில்லை காரணம் என்ன என்று ஆய்வு செய்கிறது திராவிட அரசு. அரசு ஒரு போதும் கள் தடையை நீக்க மாட்டார்கள், ஆகவே அதனை நாமாக எடுத்துகொள்ள வேண்டும். விடுதலை என்பது பெறுவது அல்ல தருவது.

ஈரோட்டு தேர்தலில் நிற்க வேண்டியவன் மாநாட்டில் பங்கேற்கிறேன் என்றால் அது கொடுத்த வாக்குறுதிக்காக மட்டுமே... பெரியார் இல்லை என்றால் அரசியலே இல்லை என்றார்கள். இந்தியம், திராவிடம் இல்லை என்றால் அரசியல் இல்லை என்றார்கள். ஆனால் கொலைக்காரன் என்று சொன்ன பிராபாகரனை தலைமை ஏற்று அரசியல் செய்பவன் நான். பெரியாரும் இல்லை, சிறியாரும் இல்லை... வந்தவன் போனவன் கிட்ட நாட்டை கொடுத்துவிட்டு நான்கு, மூன்று சீட்டுக்காக முட்டிகால் போடுபவன் நான் அல்ல. பிரபாகரனுடன் தான் நிக்கிற படத்தை தொலைக்காட்சியில் காட்ட வைத்தவன் தான்” என்றார்.