நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்படவில்லை- சீமான்

 
இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

விஜய் கட்சி தொடங்குவது ஒரு ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். தமிழகத்தில் அண்ணன் மட்டுமே சண்டை போட்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக இருப்போம் என நினைத்திருப்பார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். 

தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி: சீமான் பேட்டி  | Naam Tamilar Party is the guide for national and Dravidian parties: Seeman  interview - hindutamil.in

நெல்லை, தென்காசியில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதன்படி நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா.சத்யா போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மரியஜெனிபர் என்பவரை அறிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “காவேரி நதிநீர், கச்சத்தீவு, மீத்தேன் உள்ளிட்ட எதை பற்றியும் பிஜேபிக்கு கவலை இல்லை. என் மண் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதை கொள்ளை அடிப்பது திராவிடம் அதை பிஜேபி தடுக்காமல் இருக்கிறது. தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ஏதாவது ஒரு நன்மை நடந்துள்ளது என்பதை சொல்லட்டும் ! ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் செல்லாது என அறிவித்தது மட்டும்தான் பிஜேபி. இந்த இரண்டு பணத்தையும் செல்லாது என அறிவித்த பிஜேபிக்கு நாங்கள் செல்லா காசா?

சிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய  வேண்டும்'- சீமான்

இந்திய பொருளாதாரம் சீரழிந்துள்ளது. திமுக பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது.மோடி மீண்டும் பாரத பிரதமராக வந்து விடுவார் என்று எதிர்க்கட்சியில் இந்தி தெரியாது போடா... ஆளுங்கட்சி ஆனவுடன் இந்தி தெரியும் வாடா என தெரிவிப்பது தான் திமுகவின் கொள்கை. தற்போது கேலோ விளையாட்டு போட்டிக்கு கூட தமிழில் பெயர் வைக்க முடியாமல் தான் திமுக உள்ளது. மோடி இதுவரை எந்த மாநில விளையாட்டு துறை அமைச்சரை சந்தித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் உள்ள விளையாட்டு துறை அமைச்சரை மட்டும் சந்தித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஒரு நல்ல உறவு என்பது இருக்கிறது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்குவது ஒரு ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். அண்ணன் மட்டும்தான் தமிழகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்போம் என அவர் நினைப்பார். நல்ல ஆட்சி நல்ல அரசை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட எந்த தீய திட்டத்திற்கும் நேரடியாக சென்று பார்த்தால் அதில் கருணாநிதி பெயர் இருக்கும். அநாகரிக அரசியலின் ஆரம்ப புள்ளியே அதுதான். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 50 லட்சம் கையெழுத்தை மாநாட்டில் கண்காட்சியாக வைத்துள்ளார்கள். இந்த கையெழுத்தை ஜனாதிபதி, பாரத பிரதமரிடம் கொடுத்திருக்கலாம். ஆனால் வழங்கப்படவில்லை. 

விளையாட்டு துறை நிகழ்ச்சிக்கு அழைக்கும் போது கூட அவரிடம் வழங்கி இருக்கலாம், அப்போதும் வழங்கப்படவில்லை. நீட் தேர்வுக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் என்று ஏன் பாரத பிரதமரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்கவில்லை. பொழுதுபோக்குக்காக திமுக கையெழுத்து வாங்கி வைத்துள்ளார்கள். மாநாட்டில் காண்பிப்பது மட்டும்தான் அவர்கள் வேலையாகும். நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கப்பட மாட்டாது என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும், அது ஏமாற்று வேலையாகும். இது தமிழ் தேசியம் தெரிந்த அனைவருக்கும் தெரியும். இந்த மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வேலையாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்படவில்லை, சட்டமன்ற தேர்தலில் மட்டும் தான் நான் போட்டியிடுவேன்” என்றார்.