சவுக்கு சங்கர் வழக்கு- மீண்டும் 2 நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

 
சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சவுக்கு சங்கர்...

சவுக்கு சங்கர் மீத்ன குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கு மீண்டும் 2 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Image

பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை  இழிவுப்படுத்தி யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்ததாக கோவை போலீசார் கடந்த 5 ஆம் தேதி தேனியில் அவரை கைது செய்தனர். பின்னர், அவர் தனது வாகனத்தில் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக  வழக்குப்பதியப்பட்டுள்ளது. கோவை, தேனி, திருச்சி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.  

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை  சிறைக் காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து அவரது தாயார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து  உத்தரவிட்டார். நீதிபதி பாலாஜி அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கினார். நீதிபதிகள் இரு வேறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்... 4 வழக்குகளிலும் ஜாமீன்.. 

3- வது  நீதிபதியான ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவர் சவுக்கு சங்கர் மீத்ன குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கு மீண்டும் 2 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். செல்வாக்கு மிக்க 2 பேர் தன்னை அணுகியதாக கூறிய நீதிபதி சுவாமிநாதன், நியாயமாக இந்த வழக்கை விசாரிக்காமல் விசாரணையில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனக் கூறிய மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன், சென்னை உயர்நீதிமன்ற விதிகளின்படி, ஆட்கொணர்வு மனுக்களை இரு நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும், எனவே இந்த வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஜூன் 12-ம் தேதி பட்டியலிட வேண்டும் என 3-வது நீதிபதி ஜெயச்சந்திரன் பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.