சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்

 
savukku

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி கோவை ஜே.எம்.4 நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்... 4 வழக்குகளிலும் ஜாமீன்.. 

ரெட் பிக்ஸ் யூட்யூப்  சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவல்துறையினர் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக கோவையை சேர்ந்த காவலர் சுகன்யா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த 4ம் தேதி தேனி அருகே பழனி செட்டிப்பட்டி யில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.  அத்துடன் அவரது காரில் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் அவர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோவை அழைத்துவரப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்த கோவை சைபர் கிரைம் போலீசார். ஒரு நாள் காவல் முடிந்ததும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி கோவை ஜே.எம்.4 நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.