இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தடை

 
egg

பறவை காய்ச்சல் காரணமாக சவுதி அரேபியா இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.

நாமக்கல் மண்டலத்ததில், சுமார் 1,100 க்கு மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே முட்டை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் போன்ற ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஒரு சில ஆப்ரிக்க நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாய், ஓமன், பஹ்ரைன்,மஸ்கட் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளது. முட்டையின் நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அந்நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் டாக்டர் செந்தில் (பேட்டி) கூறுகையில், “நாமக்கல் லில் இருந்து வளைகுடா நாடுகளான துபாய் கத்தார் ஓமன் பஹ்ரைன் சார்ஜா ஆகிய நாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆகி வந்தது. தற்போது ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அந்த நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி 75 சதவீதம் வரை குறைந்துள்ளது. 10 லட்சம் முட்டைகள் மற்றுமே தற்போது ஏற்றுமதி ஆகி வருகிறது. பிற நாடுகளுக்கு மான் முட்டை ஏற்றுமதி வெகுவாக குறைந்து விட்டது” என்றார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்தியாவில் இருந்து கோழி இறைச்சி முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.