வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடஉள்ள 38 ,500 பேர்- சத்யபிரத சாகு

 
“திட்டமிட்டபடி மே 2ல் வாக்கு எண்ணிக்கை” சத்யபிரதா சாகு

ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர் ஈடுபடுவர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Image

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இதில் அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள்/ மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில், 234 அறைகளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.  8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும். தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன” என்றார்.