சாத்தான்குளம் வழக்கு- முன்னாள் எஸ்.ஐ.க்கு அவசர பரோல்

 
சாத்தான்குளம் வழக்கு- முன்னாள் எஸ்.ஐ.க்கு அவசர பரோல்

சாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் கொலை வழக்கில் மரண தண்டனைக் கைதியான முன்னாள் எஸ்.ஐ.க்கு அவசர பரோல் விடுக்கப்பட்டுள்ளது.


ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் பி. ரகுகணேஷ்க்கு மதுரை உயர்நீதிமன்றம் அவசர பரோல் வழங்கியுள்ளது. அவரது தந்தை ஜி. பரமசிவம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி மறைந்ததைத் தொடர்ந்து, மனைவி ஆர். வித்யா தாக்கல் செய்த மனுவை ஏற்று, நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா & பி. முருகேசன் அமர்வு 2 நாள் (ஆகஸ்ட் 25 & 26) அவசர விடுப்பு அளித்துள்ளது.

ரகுகணேஷ் மதுரை சென்ட்ரல் சிறையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் களக்காடுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகளில் பங்கேற்று மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் 2020-ல் கொரோனா ஊரடங்கு காலத்தில் தந்தை-மகன் ஜோடியை காவலில் அடித்துக் கொன்றதற்காக 9 போலீசாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.