#BREAKING நடிகர் சரத்பாபு காலமானார்

 
sarathbabu

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார். அவருக்கு வயது 71.

நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி..! அதிர்ச்சியில் திரையுலகினர்..!

முத்து, அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் சரத்பாபுவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஐதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்  என்பது குறிப்பிடதக்கது.

சரத்பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "நடிகர் சரத்பாபு அவர்கள் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்த முதுபெரும் நடிகர் சரத்பாபு காலமானார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. 1973ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் அறிமுகம் ஆகி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியான 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.

ttv

நடிகர் திலகம் மறைந்த திரு.சிவாஜி கணேசன் அவர்கள் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் அன்பையும், பாராட்டையும் பெற்ற திரு.சரத்பாபு அவர்களின் மறைவு திரையுலகுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். நடிகர் சரத்பாபு அவர்கள் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்" என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.