சேலத்தில் பரபரப்பு! கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்!

 
salem

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் பழைய பேருந்து நிலையம் எப்போது பரபரப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள இடம் ஆகும். இந்த நிலையில், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மோகன பிரியன் என்பவர் தனது கையை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். படுகாயமடைந்த கல்லூரி மாணவிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதேபோல் கையை கத்தியால் அறுத்ததில் படுகாயம் அடைந்த பிரியன் என்ற இளைஞரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரியன் என்ற இளைஞரும், அந்த கல்லூரி மாணவியும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இது காதலாக மாறியதாகவும், பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியன் அந்த மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.