அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு - சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை!!
Jul 2, 2024, 11:37 IST1719900423466

அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வு வழங்கியது சென்னை மாநகராட்சி.
சென்னையில் உள்ள அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு வழங்கி சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ₹3.07 கோடி கூடுதல் செலவாகிறது.
அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி உயர்த்தி வழங்கப்படுகிறது.
சமீபத்தில் அம்மா உணவக உட்கட்டமைப்பு மேம்படுத்த ₹5 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.