ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆர்டிஓ, ஆசிரியை தம்பதி!

 
1 1

நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி பகுதியில் சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து (ஆர்டிஓ) சுப்பிரமணியன் (54), ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த இவரது மனைவி பிரமிளா இருவரும் அதிகாலை ரயில் முன் பாய்ந்தனர். இதில், இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். இதுதொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இவர்களது மகள் திருமணத்தில் பெற்றோருக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அவர், திருமணம் வேறு ஒருவரை செய்ய முடிவு எடுத்துள்ளதால் இருவரும் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்பட்டது.

ஆனால், மகன், மகள் படிப்புக்காக வாங்கிய கடன் சுமை காரணமாக சுப்பிரமணி, மனைவி பிரமிளாவுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆர்டிஓ மற்றும் ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.