ரூ. 44 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..

 
gold


சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்துடனேயே காணப்பட்டாலும்,  கடந்த சில வாரங்களாக  திடீரென்று உயர்வதும், அதன் பிறகு விலை குறைவதுமாக  இருந்து வருகிறது. அதன்படி,  கடந்த 10ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,520க்கு விற்கப்பட்டது. 11ம் தேதி தங்கம் விலை  சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,160க்கும் விற்கப்பட்டது. ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர்  திங்கட்கிழமை  440 ரூபாயும்,  செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து  ஒரு சவரன் ரூ.43,120க்கும் விற்கப்பட்டது. இதனிடையே நேற்று சற்று இறக்கம் காட்டிய  தங்கம் விலை  சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது.

gold

 இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,425க்கும், சவரனுக்கு ரூ.460 உயர்ந்து, ரூ.43,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.72.70க்கு விற்கப்படுகிறது. இந்தத் தொடர் விலையேற்றம் நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நிதியாண்டின்  முதற்பாதியில் கூட தங்கம் விலை 38 ஆயிரம் என்கிற அளவிலேயே இருந்தது. ஆனால் பிற்பாதியிலான 6 மாதத்தில் இந்த அதிரடி விலையேற்றம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது..