”நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குது”- ஆர்.எஸ்.பாரதி

 
RS Bharathi

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிரான திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.

rs

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, “நான் படித்தபோது பி.ஏ. படித்தாலே போர்டு வைத்து கொள்வார்கள். இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது. ஊரில் அத்தனை பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது.

எங்கள் பட்டப்படிப்புகள் குலம், கோத்திர பெருமையால் வரவில்லை. எங்கள் பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை.  தமிழ்நாட்டில் அனைவரும் படிக்க திராவிட இயக்கங்களே காரணம், சாதிவாரி இட ஒதுக்கீட்டால்தான் எங்களில் பலர் மருத்துவர் ஆகினர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு உள்ளது. எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்குதான் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நீட்  விலக்கு தீர்மானத்தை ஒட்டு மொத்த  தமிழர்களும் ஆதரிக்கிறார்கள்” என்றார்.


ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், “பி.ஏ. பட்டம் குறித்து பேசியதில் உள்நோக்கம் இல்லை. கல்வி அனைவருக்குமானதாகிவிட்டடது என்ற அர்த்தத்தில் மட்டுமே அதை கூறினேன்” என விளக்கம் அளித்துள்ளார்.