பட்டாசு வெடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி- முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
mkstalin

இராணிப்பேட்டை மாவட்டத்தில்‌ பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில்‌ உயிரிழந்த சிறுமியின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌, நிதியுதவி அளித்துள்ளார். 

4 வயது சிறுமி பலி

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராணிப்பேட்டை மாவட்டம்‌, ஆற்காடு சட்டமன்ற தொகுதி, திமிரி ஒன்றியம்‌, மாம்பாக்கம்‌ ஊராட்சியில்‌ தீபாவளியண்று பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில்‌ சிறுமி நவிஷ்கா (வயது 4) த/பெ. ரமேஷ்‌ உயிரிழந்தார்‌ என்ற துயரமான செய்தியினைக்‌ கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்‌. உயிரிழந்த சிறுமியின்‌ குடும்பத்தினருக்கும்‌ அவருடைய உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌ ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு உயிரிழந்த சிறுமியின்‌ குடும்பத்திற்கு மூன்று இலட்சம்‌ ரூபாயும்‌, இவ்விபத்தின்போது பலத்த காயமடைந்த திரு.விக்னேஷ்‌ என்பவருக்கு ஒரு இலட்சம்‌ ரூபாயும்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.