ரூ. 1000 கொடுக்குறோமா?? அப்படி சொல்லவே இல்லையே - தமிழக அரசு விளக்கம்..

 
tn assembly

ஓட்டுநர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 1000 வழங்கப்பட இருப்பதாகவும், அதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000 நிவாரணத் தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பணியின்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது: போக்குவரத்துத்துறை உத்தரவு!

இதுபோன்ற அறிவிப்பு எதுவும் தமிழ்நாடு அரசால் வெளியிடப் படவில்லை. இது தவறான தகவல் ஆகும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுவதுடன்  இதனை  நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுபோன்ற தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. ” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.