குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம்- பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி

 
நாய் சடலம்

காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 இறந்த நாய்

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே என்பதால் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அதிக மாணவர்கள் பயின்று வருகின்றனர். பொங்கல் விடுமுறையின் போது மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிக்கு கீழ் சம்ப் தொட்டியில் மர்ம நபர்கள் நாயை வீசி சென்று உள்ளனர். பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதால் மாணவர்கள் அந்த பகுதி செல்லும்போது துர்நாற்றம் வீசி வந்துள்ளதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் உடனடியாக மாநகராட்சி அதிகாரிக்கு தெரியப்படுத்தி இறந்து கிடந்த நாயினை அப்புறப்படுத்தி தொட்டியினை சுத்தம் செய்து உள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் செந்தில் முருகன் அவரை தொடர்பு கண்டு கேட்டதற்கு இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.