கோவை ஜாஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை - கொள்ளையனின் அடையாளம் கண்டுபிடிப்பு!

 
Jos Alukas Jos Alukas

கோவை ஜாஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பான வழக்கில், கொள்ளையனின் அடையாளத்தை உறுதி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

கோவை காந்திபுரம் பகுதியில் ஜோஸ் ஆலுகாஸ் இயங்கி வருகிறது. இந்த நகைக்கடையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவில் கொள்ள சம்பவம் நடந்தது. இது தொடர்பாக ஜோஸ் ஆலுகாஸ் சார்பில் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 200 சரவன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

jos alukas


 
இந்த நிலையில், கோவை ஜாஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பான வழக்கில், கொள்ளையனின் அடையாளத்தை உறுதி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பொள்ளாச்சி  ஆனைமலையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.