மதுராந்தகம் அருகே சாலை விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள்!

 
tn

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சிலாவட்டம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

accident
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்பட்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு சக்கர வாகனத்தில் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிலாவட்டம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (15.5.2024) அதிகாலை தனக்கு முன்னதாகச் சென்ற லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் திருமதி. ஜெய் பினிஷா (வயது 40), க/பெ. திரு.அப்துல் அமீர் மற்றும் அவரது மகன்கள் திரு.மிஷால் (வயது 20), சிறுவன் பைசல் (வயது 12) மற்றும் ஓட்டுநர் திரு.சரவணன் (வயது 45) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

stalin

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.அக்தர் (வயது 16) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரதுஉறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.