வருவாய்த்துறை உயர் அதிகாரி கொரோனாவால் மரணம்
Jun 28, 2020, 18:55 IST1593350738000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது இதுவரை 82 ஆயிரத்து 275 பேர் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். சென்னையை பொருத்தவரையில் 53 ஆயிரத்து 762 பேர் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் சென்னை, எழிலகத்தில் அமைந்துள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் AC-II ஆக பணிப் புரிந்த அம்பத்தூர், கள்ளிக்குப்பத்தில் வசித்த துணை ஆட்சியர் திரு.ரமேஷ் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இவர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.