கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு!!

 
tn

கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

tn

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. இதனால் பள்ளி வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. பள்ளி சூறையாடப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளது வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் ,  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

tn

கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட ஐந்து பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு  விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டு, மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி  மரண வழக்கில்,  நிர்வாகிகள் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.