ரேஷன் கடை செயல்படும் நேரம் மாற்றம்?

 
ரேஷன் கடைகளில் இனி தரமான அரிசி : அமைச்சர் சக்கரபாணி உறுதி!

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நியாயவிலைக் கடைகளின் செயல்படும் வேலை நேரத்தை மாற்றுவது குறித்து  ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தின் கோரிக்கையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வேலை நேரம் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை, பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை என்பதில் மதியம் இடைப்பட்ட நேரமாக இரண்டரை மணி நேரம் உள்ளடக்கி சுமார் 12 மணிநேரமாகுவதால், பணியாளர்கள் மனச்சோர்வுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள் எனவும் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ஆனால் ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வேலை நாள் எனவும் விடுமுறை நாட்களை விடுமுறை நாளாக குடோன் பணியாளர்களோ ரேஷன் கடை பணியாளர்களோ பயன்படாத நாளாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

காஞ்சிபுரம். சென்னை ஆகிய மாவட்டங்களில் வேலை நேரத்தை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 100 மணி வரை பிற்பகல் 200 மணிமுதல் மாலை 6.00 மணிவரை மாற்றித்தருமாறும் முதல் 2 வெள்ளிக்கிழமைகளை வேலை நேரமாகவும் முதல் 2 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகவும் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக பதிவாளர் அலுவலகத்திற்கு குறிப்புகள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நேரத்தை மாற்றுவது குறித்து தீவிர பரிசீலனை செய்யப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.