தமிழ்நட்டில் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கியது .

 
ரம்ஜான் ஸ்பெஷல்: பசி ஓர் மருந்து! இதுதான் இஸ்லாமியத்தின் சமத்துவம்!!

தமிழ்நட்டில் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கியது . மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.  

இஸ்லாமியர்களின் பண்டிகளைகளில் மிக முக்கியானது ரம்ஜான்.  ரமலான்  மாத தொடக்கத்தில்  வானில்  பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.  நோன்பு முடிந்து மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் இருக்க வேண்டும்.  பிறை கணக்குப்படி 29 அல்லது 30 நாட்கள் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பர்.  வானில் பிறை பார்த்து நோன்பு தொடங்கப்படும் நிலையில்  நேற்று ரமலான் நோன்பு தென்படவில்லை.  

ரம்ஜான் தொழுகையை வீட்டிலேயே நடத்துமாறு தாரூல் உலூம் மதரஸாவின் பத்வா அறிவிப்பு!
 
இருந்தபோதிலும், ரமலான் நோன்பு 24-ந்தேதி (இன்று) முதல் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்தார்.  ஏனெனில் தமிழ்நாட்டை பொறுத்தவரை எப்போதும்  சவுதி அரேபியாவுக்கு மறுநாளே நோன்பு தொடங்கும். அதன்படி சவுதி அரேபியாவில் நேற்று  ( மார்ச் 23) நோன்பு தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டில் இன்று  ரம்ஜான் நோன்பு தொடங்கும் என்றார். அதன்படி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று ரமலான் நோன்பை தொடங்கினர்.  இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.