ராமர் கோயில் திறப்பு அரசியல் நிகழ்வு அல்ல- ரஜினிகாந்த்

 
rajinikanth

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றப்பின் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது பேசிய ரஜினிகாந்த், “ராமர் கோயில் திறப்பு என்பது என்னை பொறுத்தவரை அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு. ராமர் கோயில் திறந்தவுடன் நேரில் பார்த்த முதல் 150 பேரில் நானும் ஒருவன். உண்மையில் எனக்கு பெரிய சந்தோசம். இந்த விவகாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. எல்லாருடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை. அனைவரின் பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை நான் ஆன்மீகமாகத்தான் பார்க்கிறேன்” என்றார்.

ramar

முன்னதாக அயோத்தியில் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து சிலை திறப்பதற்கான பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது. ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பெரிய தட்டில் பூஜை பொருட்களுடன் வந்த பிரதமர் மோடி, பிராண பிரதிஷ்டை பூஜையில் அமர்ந்தார். மைசூரை அடிப்படையாகக் கொண்ட ஸ்தபதி (சிற்பி) அருண் யோகிராஜ் வடிவமைத்த ஸ்ரீராமர் சிலைதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள பால ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின்னர் பொதுமக்களின் வழிப்பாட்டிற்காக திறக்கப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி தீபாராதணை காட்டி வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடதக்கது.