இனி ஒவ்வொரு ஆண்டும் ராமர் கோயிலுக்கு செல்வேன்- ரஜினிகாந்த்

 
இனி ஒவ்வொரு ஆண்டும் ராமர் கோயிலுக்கு செல்வேன்- ரஜினிகாந்த்

ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் நான் கலந்துகொண்டது எனது வாழ்நாள் பாக்கியம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ramar

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து சிலை திறப்பதற்கான பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது. ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பெரிய தட்டில் பூஜை பொருட்களுடன் வந்த பிரதமர் மோடி, பிராண பிரதிஷ்டை பூஜையில் அமர்ந்தார். மைசூரை அடிப்படையாகக் கொண்ட ஸ்தபதி (சிற்பி) அருண் யோகிராஜ் வடிவமைத்த ஸ்ரீராமர் சிலைதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள பால ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின்னர் பொதுமக்களின் வழிப்பாட்டிற்காக திறக்கப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி தீபாராதணை காட்டி வழிபாடு செய்தார்.  

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த். “வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் நான் கலந்துகொண்டது எனது வாழ்நாள் பாக்கியம். ராமரின் சிலை மிகவும் சிறப்பாக இருந்தது. இனி ஒவ்வொரு ஆண்டும் கோயிலுக்கு வருவேன்” என்றார்.