நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராக ராஜேஷ் நியமனம்- சீமான்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராக திருச்சி ஜல்லிக்கட்டு ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி மேற்கு தொகுதி, 73 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த து.இராஜேஷ் (15912174188), திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி, 129 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வெ.சோழசூரன் (16702971668) ஆகியோர் நாம் தமிழர் கட்சி - மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள், பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.