அடுத்த 3 மணிநேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை

 
rain

அடுத்த 3 மணிநேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சிராப்பள்ளி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

tnஇந்நிலையில் இன்று மாலை 4 மணி வரை சேலம் ,ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர்  ஆகிய மாவட்டங்களிலும் , திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ,திருப்பத்தூர்,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை, இராமநாதபுரம், தேனி ,கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.