தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!!

 
rain

இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும், தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

rain

வருகிற 11-ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி தென்மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை  ஒட்டி இருக்கும்.

rain

இன்று தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும். நாளை இலங்கை தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி மின்னலுடன் இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று, மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் . இதனால் இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.