அமைச்சர் வன்னி அரசுடன் வந்த நபரை கடித்த மலைப்பாம்பு..!

 
1

பழங்குடியின மக்கள் நலன் குறித்து ஆய்வு செய்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவுடன் வந்த மணிகண்டன் என்பவரை மலைப்பாம்பு கடித்தது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பழங்குடியின மக்களின் நலன் குறித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் ஆய்வில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை எதிர்பாராதவிதமாக மலைப்பாம்பு கடித்தது. உடனடியாக மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளார்.