#BREAKING முதல்வரின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

 
s

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திருச்செந்தூர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனை செய்யப்பட்ட சம்பவம் திருச்சுழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் வழக்கம்போல் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் கார் அங்கு வந்தது. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், அதிகாரிகள் அவரது வாகனத்தையும் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.

இதற்கிடையில், முதலமைச்சருடன் பின்னால் வந்த பாதுகாப்பு மற்றும் ஆதரவாளர்கள் பயணம் செய்த வாகனங்களில் இருந்தவர்கள், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் சில நேரம் பதற்றமான நிலை உருவானது. மேலும், முதலமைச்சரின் காரில் தேசிய கொடி பொருத்தப்பட்டிருந்தது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளின்படி இதுபோன்ற விஷயங்களும் கண்காணிக்கப்படுவதால், அதிகாரிகள் அதையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தனர். அதனைத் தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள் முதலமைச்சரின் வாகனத்தையும், அவருடன் வந்த மற்றொரு வாகனத்தையும் முழுமையாக சோதனை செய்தனர். சோதனை முடிந்த பின்னர், எந்த விதமான குற்றச்சாட்டுகளும் பதிவாகாத நிலையில், ரங்கசாமி அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்தார்.