"மைக்கை நீட்டினால் குரங்கு டான்ஸ் ஆடுவது போல் ஆடுகிறார்"- சீமானை கிழித்தெடுத்த புகழேந்தி

 
ஓபிஎஸ் அமெரிக்காவிலிருந்து வந்த பிறகுதான் எங்க ஆட்டமே இருக்கு – புகழேந்தி

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து மனு அளித்தார்.

V.pugazhendhi,அதிமுக செய்தித் தொடர்பாளராக வா.புகழேந்தி நியமனம் - pugazhendhi  appointed as aiadmk spokesperson - Samayam Tamil


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, “தந்தை பெரியார்தான் திராவிட இயக்கங்களின் தலை காவேரி. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை எங்கும் நடைபெறாத நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் நம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னிடம் வெடிகுண்டு உள்ளது. வெடிகுண்டு எறிந்தால் அந்த இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது. கொலைவெறியில் உள்ளேன் எனக் கூறுகிறார். தேர்தல் பரப்புரையில் செருப்பை எடுத்து காட்டி ஈரோடு மக்களை அவமதிக்கிறார்.

மைக்கை நீட்டினால் குரங்கு டான்ஸ் ஆடுவது போல் ஆடுகிறார். தந்தை பெரியாரை சீமானை விட புகழ்ந்தவர் யாருமில்லை. திருமாவளவன் தான் சீமானுக்கு அரசியல் கற்றுக்கொடுத்தார். ஆனால் சீமான் தற்போது திருமாவளவனையே திட்டுகிறார். சீமான் குழம்பி போய் உள்ளார். பிரபாகரன் தான் சீமானுக்கு அரசியல் சொல்லிக்கொடுத்ததாக கூறுகின்றனர். பிரபாகரனுக்கு வேறு வேலை இல்லையா? இப்படிப்பட்ட ஆட்களை வளர விட்டால் தமிழ்நாட்டிற்கு தீமைதான். சீமான் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்து விட்டார். பாஜக தவிர அனைத்து கட்சிகளும் சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எல்லோரது எதிர்ப்பையும் மீறி எதிர்நீச்சல் போடவில்லை, சாக்கடையில் புரண்டு வருகிறார். தேர்தல் பரப்புரையில் சீமானின் பேச்சின் மீது  தேர்தல் நடத்தை விதிப்படி கட்சியை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளேன். நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார் .