நிபா வைரஸ்- யாரும் அச்சப்பட தேவையில்லை: தமிழிசை

 
Tamilisai

கேரளவில் பரவும் நிபா வைரஸ் காரணமாக, புதுச்சேரி மாநிலத்தில் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

tamilisai

நாடு முழுவதும் உயர்தர சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் ‘ஆயுஷ்மான் பவ’ இயக்கத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று காணொளி வாயிலான தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை காண புதுச்சேரி உள்ள கம்பன் கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், ஜெயக்குமார், எம்பி செல்வகணபதி மற்றும் எம்எல்ஏக்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “கேரளம் மாநிலத்தில் நிபா வைரஸ் பரவிவரும் நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் சுகாாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வர். குறிப்பாக புதுச்சேரி பிராந்தியமான மாஹேவில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற குறிப்பை நாம் சொல்ல இருக்கின்றோம். யாரும் பயப்படத்தேவையில்லை. இங்கு யாருக்கும் நிபா வைரஸ் குறித்த அறிகுறிகள் இல்லை. அதே நேரத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அத்தனை முன்னச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும் அங்கிருந்து வரும் ரயிலை நிறுத்துவது, ஊரடங்கு பிறப்பிப்பது போன்ற அவசரகால சூழ்நிலைகள் இல்லை. அங்குள்ள சுகாதாரத்துறையும் அதுபோன்று சொல்லவில்லை.

tamilisai

அதனால் அந்தளவுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தில் பரவும் வைரஸ் என்ன என்பதை கண்டறிந்துள்ளனர். பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. அப்படி ஒருவேளை பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சியமாக புதுச்சேரியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை இல்லை. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், பரிசோதனை செய்யலாம்” என்றார்.