மனு ஸ்மிருதி நூலுக்கு எதிர்ப்பு: சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

 

மனு ஸ்மிருதி நூலுக்கு எதிர்ப்பு: சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

மனுஸ்மிருதி என்ற நூலை எதிர்த்து தமிழகத்தின் பல இடங்களில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பெண்களை இழிவு செய்யும் வகையில் எழுதப்பட்டிருக்கும் மனுஸ்மிருதி நூலை தடை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாக கூறப்படும் மனுஸ்மிருதி நூல் பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் விதமாகவும் கொலைகளை நியாயப்படுத்தும் விதமாகவும் பெண்களை கேவலப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது.

மனு ஸ்மிருதி நூலுக்கு எதிர்ப்பு: சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

இதனால் அதனை அண்ணல் அம்பேத்கர் தீயிட்டு கொளுத்தினார். அவரது கோட்பாடுகளும் இதற்கு எதிராகவே இருந்தன. ஆனால் தற்போது சனாதன சக்திகள் மீண்டும் மனுஸ்மிருதி அடிப்படையில் நாட்டின் ஆட்சியை அமைக்க முற்படுகிறார்கள். மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலை தடை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

மனு ஸ்மிருதி நூலுக்கு எதிர்ப்பு: சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

இந்த நிலையில், மனுஸ்மிருதி நூலை தடை செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மனுஸ்மிருதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.