ஆர்.என்.ரவிக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குண்டுக்கட்டாக கைது

 
போராட்டம்

காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி தமிழகத்தில் எந்த பகுதிக்கு வந்தாலும் கருப்புக்கொடி காட்டப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த மாதம் அறிவித்திருந்தது. 

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்- 50 பேர் கைது

இந்த நிலையிலே உதகையில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சென்னை திரும்பினார். ஆளுநர் செல்லும் வழியில் கோவை விமான நிலையம் அருகே சிட்ரா பகுதியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டனர்.  கருப்பு கொடியுடன் வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்பொழுது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உட்பட  அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்பொழுது காவல் துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். காவல்துறை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு சாதகமாக செயல்படுவதாக கூறி  அக்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் விமான நிலையம் செல்லும் சாலை பரபரப்பானது. இதனால் சிட்ரா பகுதியில் இருந்து விமான நிலையம் செல்லும் பாதை வரை  ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.