39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணியிடமாற்றம்

 
tn govt

தமிழ்நாட்டில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

transfer

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏடிஜிபி ராஜீவ்குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள சந்தீப்ராய் ரத்தோர் சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக உள்ள அபய்குமார் சிங் அதே துறையின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டான்ஜெட்கோவில் விஜிலன்ஸ் ஏடிஜிபியாக உள்ள வன்னிய பெருமாள், அதே பிரிவில் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் சிஐடி 2 பிரிவு காவல் கண்காணிப்பாளராக கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளராக அருண் பாலகோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர வடக்கு பிரிவு துணை ஆணையராக பி.சரவணன் நியமனம். சென்னையில் மதுவிலக்கு குற்றப்பிரிவு மத்திய நுண்ணறிவுப் பிரிவு கண்காணிப்பாளாராக ஆர். பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் அமலாக்கப்பிரிவு ஐஜியாக ஏ.ராதிகா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர பூக்கடை காவல் துணை ஆணையராக ஸ்ரேயா குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல் துணை ஆணையராக வி.ஆர்.ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னையில் கியூ பிரிவு காவல் கண்காணிப்பாளராக சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவணக் காப்பக காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை நகர் தெற்கு சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக பிரதீப் நியமனம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 7-வது பட்டாலியன் கமாண்டண்ட்டாக ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

assembly

இதேபோல் சென்னை தெற்குச்சரக ஊழல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளராக வி.சரவணாக்குமாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எஸ்பியாக பதவி உயர்வு பெறும் வினோத் சாந்தாராம் சென்னையில் சிபிசிஐடி 1, சிறப்பு பிரிவுகள் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்பியாக பதவி உயர்வு பெறும் விஜேய கார்த்திக்ராஜ், சென்னையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்பியாக பதவி உயர்வு பெறும் வி.வி.கீதாஞ்சலி சென்னையில் சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு ஆர்.பொன் கார்த்திக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீதேவி நியமனம். திருச்சி நகர் தெற்கு காவல்துறை துணை ஆணையராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். செங்குன்றம் துணை ஆணையராக பல்லா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல் நுண்ணறிவுப் பிரிவு எஸ்பியாக சிறப்பு சிஐடி பிரிவு எஸ்பி எஸ் சரவணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளி துணை இயக்குநராக தீபா சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சிவில் சப்ளை சிஐடி பிரிவு ஏடிஜிபியாக உள்ள அருண் ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் நியமனம், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஹர்ஷ் சிங் நியமனம், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜவகர் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்பியாக ராஜேஷ் கண்ணன், வேலூர் எஸ்பியாக மணிவண்ணன், செங்கல்பட்டு எஸ்பியாக சாய் பிரணீத், திருப்பூர் எஸ்பியாக சாமிநாதன், விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக ஷசாங்க் சாய் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.